தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

''அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும்; சத்தியமாக எனக்கு அது கிடையாது,'' என நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் படம் செப்.9ல் தியேட்டரில் வெளியாகிறது. படம் உள்ளிட்ட விஷயம் குறித்து விஜய்சேதுபதி நேற்று அளித்த பேட்டி: 'லாபம்' படம் விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை அவர் பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில், ஜனநாதன் பார்த்த கோணத்தில் படத்தை பார்க்கலாம்.
'லாபம்' என்பது எப்படி பகல் கொள்ளையாக மாறுகிறது என்பதை பொருளாதார விஞ்ஞானிகள் கூறிய விளக்கத்துடன், தன் பாணியில் இயக்குனர் படமாக்கியுள்ளார். லாபத்தை பற்றிய பாடம், இப்படம். படத்தின் க்ளைமாக்ஸ் வரை அனைத்தையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் ஜனநாதன் மறைந்தார். உதவிக்கு ஆட்கள் இல்லாததால் தான், அவரை இழந்து விட்டோம்.
நான் நடித்த பல படங்கள் தயாராகி, நான்கு ஆண்டுகள் ஆகியும் சட்ட சிக்கலால் வெளிவராமல் இருந்தது. தற்போது அவை வெளியாவதால் அதிக படங்கள் வெளிவரும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான படங்களை நான் தேர்வு செய்வதில்லை. கதையை சுவாரஸ்யமாக கூறவே விரும்புகிறேன். என்னால் முடிந்தது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதே.
ராமராஜன், ரஜினி, கவுண்டமணி, கனகா உள்ளிட்ட யார் இடத்தையும் நம்மால் நிரப்ப முடியாது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர்கள் செய்ததில் கால் துாசி கூட என்னால் செய்ய முடியாது. இப்போது பாதி நேரத்தை டெக்னாலஜியே சாப்பிட்டு விடுகிறது. அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும். அந்த அறிவு சத்தியமாக எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.