ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பவன் கல்யாண், தற்போது ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் இந்த வருஷத்திலேயே வெளியாக உள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தை முடித்ததும், அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பவன்கல்யாண். ஏற்கனவே இந்த கூட்டணி கப்பார் சிங் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கூட்டணி தான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி முடித்துவிட்டாராம் ஹரிஷ் சங்கர். ஏற்கனவே அவரது இயக்கத்தில் துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா ராஜு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. அதேசமயம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசி வருகிறாராம் ஹரிஷ் ஷங்கர்.