பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமா உலகில் பல விசித்திரங்கள் நடப்பது உண்டு. தங்களுக்கு மகளாக சிறு குழந்தையாக நடித்தவர்கள், வளர்ந்து கதாநாயகியான பிறகு அவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கிர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார்.
தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்திற்காக கிர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இது பற்றி கேள்விபட்ட கிர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தாராம்.
இருந்தாலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு டோலிவுட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாம். இப்படியும் ஒரு நடிகர் இருப்பாரா என்று கேட்கிறார்களாம்.