தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்து சுமார் 500 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்தவர் செந்தில். அதோடு சில படங்களில் அவர் குணசித்ர வேடத்திலும் நடித்திருக்கிறார். தற்போது 70 வயதை அடைந்துள்ள செந்தில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ள செந்திலுக்கு ஜோடி கிடையாது. அவர் எதற்காக சிறை சென்றார் என்பதுதான் கதையின் சஸ்பென்ஸ். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ளார் செந்தில்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தனக்கான டப்பிங் தற்போது பேசி முடித்துள்ளார் செந்தில். வெகுவிரைவிலேயே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் சுரேஷ் சங்கையா.