இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் நடுவன். சரண்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பரத் ஹீரோ. பைரவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அபர்னா வினோத் ஹீரோயின். இவர்கள் தவிர கோகுல் ஆனந்த் பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் சரண்குமார் கூறியதாவது: மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, என்ன செய்வீர்கள்? அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா? என்பதுதான் படம்.
வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் நிவாஸ் என்கிற இளைஞனின் கதை. நிவாஸாக பரத் நடித்திருக்கிறார். நடுவன் என்றால் மத்தியதர வாழ்க்கை வாழ்கிறவன். மிடில் கிளாஸ் மேன் என்று பொருள்.
தன்னை ஏமாற்றியவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும். இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை. என்றார்.