2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

இந்தி படம் பார்க்காதவர்களுக்கு கூட அதிரடியான பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் நன்கு தெரிந்த முகம் ஆகிவிட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் நடித்துள்ள தலைவி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக இன்று(செப்., 10) வெளியாகி உள்ளது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்பை, ஐதராபாத், சென்னை என மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் கங்கனா.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, தனக்கு தெலுங்கில் மீண்டும் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாகவும், அதுவும் பிரபாஸுக்கு ஜோடியாக பூரி ஜெகந்நாத் டைரக்சனிலேயே மீண்டும் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பூரி ஜெகந்நாத் டைரக்ஷனில் ஏக் நிரஞ்சன் என்கிற படத்தில் பிரபாஸ் ஜோடியாக கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.