எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்தியிலும் பான் இந்தியா படமாகத்தான் உருவாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் திரைக்கதை மற்றும் தமிழில் வசனம் எழுதும் கூட்டணியில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடி ராசாத்தி, அடியே அழகே என மென்மையான பாடல்களை எழுதிய விவேக் அதன் பிறகு ரஜினிக்கு மரண மாஸ், விஜய்க்கு சிம்டாங்காரன் என அதிரடியான பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தநிலையில், திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் எழுதுவது என தனது எல்லையை விரிவுபடுத்தி உள்ளார் விவேக். அது இயக்குனர் ஷங்கர் படத்தின் மூலமாக நிறைவேறி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள விவேக், இந்த படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது என கூறியுள்ளார்.