தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தொலைக்காட்சி பிரபலமான நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்பதை பகிர்ந்து கொண்டார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் வில்லியாகவும், நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு அதிதி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்றுள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இது குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு தற்போது நீலிமா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியையோ, குழந்தையையோ சென்றடையாது. இதை புரிய வைத்தது என் கணவர் தான். அதன் பிறகே தான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தினார்.