ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணியில் இருந்த ஒரு கதாநாயகி திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி, டீனேஜ் பெண்ணுக்கு தாயாகி, பின்னர் கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்ற நிலையில், மீண்டும் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வர முடியுமா என்றால், முடியும் என சாதித்து காட்டி வருகிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். தற்போது மலையாள சினிமாவின் பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்துவரும் மஞ்சு வாரியர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் மலையாளம் மற்றும் அரபி என இரு மொழிப்பாடமாக உருவாகும் ஆயிஷா என்கிற படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனரான ஆமிர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். முதன்முறையாக மலையாளம் மற்றும் அரபியில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் இது என்றும் இதில் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.