தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக எனது வலிமை என பதிவு செய்துள்ளார். சீக்கிரம் குணமாகி வர ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.