இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
புதுமுகம் கார்த்திகேயன் வேலு நாயகனாக நடிக்க, கன்னடத்தை சேர்ந்த சஞ்சனா புர்லி நாயகியாக தமிழில் அறிமுகமாக உருவாகியுள்ள சூ மந்திரகாளி படத்தை ஈஸ்வர் கொற்றவை இயக்கியுள்ளார். இயக்குனர் சற்குணம் வெளியிடுகிறார்.
படம் குறித்து நடிகரும், இயக்குனரும் அளித்த பேட்டி: தலைப்பை வைத்து இது பேய் படம் என நினைக்க வேண்டாம். காமெடியான மாயாஜாலமான பேண்டஸி படம். படத்திற்காக இரண்டு மாதம் ஒத்திகை பார்த்தோம். தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். காட்டில் படப்பிடிப்பை நடத்திய போது யானை வந்து, ஒட்டு மொத்த படக்குழுவையும் ஓட வைத்தது. படத்தில் கிஷோர் தேவ் என்பவர் முக்கியமான பெண் வேடத்தில் நடித்துள்ளார். கிராம மக்கள் அனைவரும் அவரை நிஜ பெண்ணாகவே நினைத்தனர். லைட் மேன் ஒருவர் அவர் மீது ஆசைப்பட்டு கடத்தியே சென்று விட்டார். கடைசியில் லைட்மேனுக்கு புரியவைத்து, நடிகரை மீட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.