ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனிடையே தான் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை என கூறியுள்ள வடிவேலு, ‛என் பெயரில் உலா வரும் சமூகவலைதள கணக்குகள் அனைத்தும் போலி' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் சுராஜ் இயக்கும் படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் டுவிட்டர் பக்கத்தில் வடிவேலு உடன் தான் உள்ள ரசிகர்கள் உருவாக்கிய படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர், வடிவேலு உடன் நடிப்பதை கிட்டதட்ட உறுதிப்படுத்தியுள்ளார். அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள ப்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தரலாம்.