ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேரள மாநிலம் பத்தனம்திட்டா புள்ளியோட புரா கோவிலில் சாமிகள் உலா வரும் படகுகள் கோவில் வளாகத்தில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த படகில் அதற்கென விரதம் இருந்தவர்கள், வேட்டி, துண்டு அணிந்து மட்டுமே ஏற முடியும். குறிப்பாக பெண்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் இந்த படகில் மலையாள சின்னத்திரை நடிகை நமிஷா பிஜோ அவரது நண்பர் உன்னியுடன் ஏறி அந்த படகில் புகைப்படங்கள் எடுத்துளார். அதோடு படகில் செருப்பு காலுடன் ஏறி உள்ளனர்.
இதனால் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் (சேவா சமிதி) திருவள்ளா போலீசில் நடிகை மீது புகார் செய்தனர். அதன்படி நிமிஷா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (வழிபாட்டு இடத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிமிஷாவும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த படகின் புனிதம் பற்றி தனக்கு தெரியாது என்றும், அறியாமல் செய்த தவறுக்கு இறைவன் சன்னிதானத்தில் நின்று மன்னிப்பு கேட்பதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தால் அவர் மன்னிக்கப்படலாம், அல்லது சிறிய அளவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.