நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. என்றாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்டது. தற்போதுதான் தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தியேட்டர்களும் மூடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தியேட்டர்கள் ஞாயிற்றுக் கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு அதிகமான வசூலாகும் நாள் ஞாயிற்றுக் கிழமைதான், அந்த நாளில் தியேட்டர் மூடப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த தடை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.