படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜும், மோகன் பாபுவின் மகனும் தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதா, பிரகாஷ்ராஜ் அணிக்கு தாவி அந்த அணியின் சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தல் சூடுபிடித்து வருகிறது. பிரகாஷ்ராஜ் கன்னடர், அவர் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆககூடாது என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வருகிறது. விஷ்ணு மஞ்சு அணிக்கு என்.டி.ஆர் குடும்பமும், பிரகாஷ்ராஜூக்கு சிரஞ்சீவி குடும்பமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய பிரகாஷ்ராஜ் தான் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு 10 கோடி நன்கொடை தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் வாக்களிக்கும் தகுதி படைத்த உறுப்பினர்களுக்கு கணிசமான பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ் "கொரோனா விதிமுறைகளை பின்பற்றிதான் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். விருந்து நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றி கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.