ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களிலும், வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா பார்வை' என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனந்தி இந்த தொடரில் இரண்டாம் கதாநாயகியாக வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடரின் நாயகன் முனாஃப் ரகுமானுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், 'விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
'ராஜ பார்வை' தொடர் தினமும் பிற்பகல் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது