கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் எனத் தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில்தான் சூர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் சில மாற்றங்கள் நடக்கும் எனத் தெரிகிறது.
சூரி, விஜய் சேதுபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கி வரும் 'விடுதலை' படத்தின் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் 'வாடிவாசல்' பக்கம் வர உள்ளாராம் வெற்றிமாறன். அதற்குள்ள சிவா இயக்கத்தில் எப்போதோ அறிவிக்கப்பட்ட படத்தை மீண்டும் துவங்கும் முடிவில் உள்ளாராம் சூர்யா.
ரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கி வரும் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கடுத்த படமாக சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்திற்காக இரண்டு முறை தனது படங்களை தள்ளி வைத்துள்ளார் சூர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தை இயக்கப் போய்விட்டார். சிவா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார்.