தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீப காலங்களில் நாக சைதன்யாவுடன் அவரது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்த போது அவரிடம் அது பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரையும் 'புத்தி இருக்கா' என கடுமையாகத் திட்டினார். திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் சாமி கும்பிட்ட சமந்தா அப்படியே தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார் எனத் தெரிகிறது.
அவருடைய தோழிகளான நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் 'வீக் என்ட்'டை கொண்டாடியுள்ளார். “கடந்த வாரம், அற்புதமான ஈவ்னிங்கிற்கு மிக்க நன்றி... த்ரிஷா, கீர்த்தி, கல்யாணி..” என இன்ஸ்டாவில் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சிக்கும் சமந்தா எந்த விதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.