தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதக் கடைசியில் இருந்து ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இப்படம் பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாய் படமாக்க உள்ளார்களாம். அதில் மட்டும் 100 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுடன் ராம்சரண் சண்டையிடுவது போலவும் படத்தில் காட்சி வைத்துள்ளார்களாம். இதுவரை இப்படி ஒரு சண்டைக்காட்சி வரவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தக் காட்சியைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் இப்படியான பல பில்ட்-அப்கள் தொடர்ந்து வரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.