தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜெய். முன்வரிசை ஹீரோ பட்டியலில் இணையவில்லை என்றபோதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில் சுசீந்திரன் இயக்கத்தில் மட்டும் குற்றமே குற்றம், சிவ சிவா என இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் சிவ சிவா என்ற படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் ஜெய். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நடிகரானது ஒரு விபத்து. காரணம் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டேன். ஆனபோதும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்து வந்தேன். 19 வருடங்கள் கழித்து இப்போது சிவ சிவா என்ற படத்தில் எனது கனது கனவு நனவாகியுள்ளது. இந்த படத்தில் எனது இசையில் உருவான காடமுட்டை என்ற பாடலின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெய்.