சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ரசிகர்களிடம் அவருக்கு இருந்த கிரேஸ் இன்னும் குறையவில்லை. தனது காதல் கணவருடன் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய சமந்தா, சமீப நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கூட சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னை குறித்து தேவையில்லாத வதந்திகளும் அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது கணவருடன் ஒருவேளை பிரிவு என்றாலும் கூட அதை நானே முறைப்படி அறிவிபேன் என்றும் இப்படி ஆளாளுக்கு விதவிதமாக செய்திகளை திரித்து எழுதுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க போவதாக சமந்தா தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது