ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நட்பே துணை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனைகா. டிக்கிலோனா படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் ‛பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...' பாடல் மூலம் பிரபலமாகியுள்ளார். அவர் அளித்த பேட்டி:
மலையாளத்தில் முதலில் நடித்தேன். நட்பே துணை தமிழில் முதல் படம். டிக்கிலோனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பின் மீதான ஆர்வத்தாலேயே நடிக்க வந்தேன். தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒன்றிலும் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சம்பளம் முக்கியமல்ல. வித்தியாசமான கதையம்சத்துடன், நடிப்புக்கு சவால் தரும் வேடங்களில் நடிக்க வேண்டும். மாடலிங் பிடிக்கும் என்பதால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறேன். எதிர்மறையான விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தமிழில் அதிகம் வருகிறது. இது வரவேற்க கூடிய ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.