ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் செல்வராகவன் அதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன்பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட்டரில் தற்போது வெளியிடுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‛‛இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவில் தனியாக இருப்பதே நிம்மதி என்று பதிவிட்டிருப்பதால் ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் இப்படியொரு பதிவு போட்டுள்ளாரோ? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.