இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு ஆண்டு கழித்து உங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை இல்லை. ஆனால் நெல்சன்தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாகவும், ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. மொத்தமே பத்து டயலாக்தான். எல்லோரும் பேசும்போது நான் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகுதான் நெல்சன் என்னை எப்படி நடிக்க வைத்திருக்கிறார் என்று புரிந்தது.
உன்னாலே உன்னாலே படத்திலிருந்தே வினய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான்தான் இருக்கிறதிலேயே உயரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனுஷன் என்னைவிட உயரமாக இருக்கிறார். அதனால் நடிக்கும்போது ஆப்பிள் பாக்ஸ் போட்டுதான் நின்றேன். வினய்யின் தோன்றமும், குரலும், இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். படப்பிடிப்பின்போது தமிழ் தெரிந்த பிரியங்காவுடன் நடித்தபோது காட்சி எப்படி வந்திருக்கும் என்ற தெளிவு இருந்தது. மற்றபடி ரெடின், யோகிபாபு நடிப்பு நன்றாக இருந்தது. விஜய் கார்திக் ஒளிப்பதிவு படத்தின் அட்டகாசமாக வந்துள்ளது, அதை திரையரங்கில் பார்த்தால் தெரியும். அனிரூத் தான் இந்த படத்தை அறிவித்ததிலிருந்தே, அடையாளமாக இருந்தார். டாக்டர் படம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.