தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு ஆண்டு கழித்து உங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை இல்லை. ஆனால் நெல்சன்தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாகவும், ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. மொத்தமே பத்து டயலாக்தான். எல்லோரும் பேசும்போது நான் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகுதான் நெல்சன் என்னை எப்படி நடிக்க வைத்திருக்கிறார் என்று புரிந்தது.
உன்னாலே உன்னாலே படத்திலிருந்தே வினய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான்தான் இருக்கிறதிலேயே உயரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனுஷன் என்னைவிட உயரமாக இருக்கிறார். அதனால் நடிக்கும்போது ஆப்பிள் பாக்ஸ் போட்டுதான் நின்றேன். வினய்யின் தோன்றமும், குரலும், இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். படப்பிடிப்பின்போது தமிழ் தெரிந்த பிரியங்காவுடன் நடித்தபோது காட்சி எப்படி வந்திருக்கும் என்ற தெளிவு இருந்தது. மற்றபடி ரெடின், யோகிபாபு நடிப்பு நன்றாக இருந்தது. விஜய் கார்திக் ஒளிப்பதிவு படத்தின் அட்டகாசமாக வந்துள்ளது, அதை திரையரங்கில் பார்த்தால் தெரியும். அனிரூத் தான் இந்த படத்தை அறிவித்ததிலிருந்தே, அடையாளமாக இருந்தார். டாக்டர் படம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.