பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நான்கு வருட திருமண பந்தம் முடிவதற்குள்ளாகவே தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்களது பிரிவு குறித்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவர்களே தற்போது அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் இவர்கள் அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியான பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு மட்டும் போதாது என்கிற தலைப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக உங்கள் வருமானம், வரவு-செலவு, மதம், குழந்தைகளை வளர்க்கும் ஸ்டைல், குடும்பத்துடன் எப்படி இணைந்து பயணிப்பீர்கள், குழந்தைகள் மீது எந்த விதமான நம்பிக்கைகளை புகுத்துவீர்கள், உங்களது சிறுவயது அபிலாஷைகள், செக்ஸ் எதிர்பார்ப்புகள், துணை குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், குடும்பத்தினருடைய ஆரோக்கிய விபரம், அவர்களது மன நலம் குறித்த விபரம், அங்கே செய்யவேண்டிய கடமைகள், சொந்த வீட்டுக்கனவு, வேலை, படிப்பு, அரசியல் பார்வைகள் மற்றும் மனதில் என்ன தோன்றுகிறதோ அவையெல்லாம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பு மட்டுமே போதாது.." என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் காதல் திருமணம் இப்படி நான்கு வருடங்களிலேயே முடிவடைந்துள்ளது என்பதாலேயே, காதல் திருமணம் குறித்து இப்படி ஒரு பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.