தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல நட்சத்திர ஜோடியான சமந்தா - நாகசைதன்யா இருவரின் காதல் திருமணம் நான்கு வருடங்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியான செய்தி தான். அதைவிட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா பிரபல நடிகர். அவர்களது குடும்பமே பாரம்பரிய சினிமா குடும்பம். ஆனாலும் நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று என்றும் அது குறித்து கேள்விப்பட்டதும் தனது மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்ததாகவும் ஆனால் தனது மகள் சமந்தா தனது தரப்பு விளக்கங்களை கூறி தன்னை கன்வின்ஸ் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் சமந்தாவின் தந்தை.