இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு நிகராக வெளி தளங்களிலும் இசை அமைத்து வருகிறார். விளையாட்டு போட்டிகள், பண்டிகைகள், தேசப்பற்று, மொழி உயர்வு ஆகியவற்றுக்கும் இசை அமைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது டாக்குமென்டரி தொடர் ஒன்றுக்கு இசை அமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் டில்லியில், தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ‛ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்' என்ற பெயரில் தொடராக உருவாகியுள்ளது. ஷப்த், பார்ச்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் மற்றும் அனுபவம் சோப்ரா ஆகியோர் இயக்கி உள்ளனர். இது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: லீனா யாதவுடன் சேர்ந்து பணியாற்றியது தனித்துவமான அனுபவமாக இருந்தது. மிகவும் சிக்கலான, உணர்வுப்பூர்வமான பிரச்சினையை இந்தத் தொடர் பேசுவதால் இதற்காக வேறுபட்ட, நுணுக்கமான அணுகுமுறை இசையில் தேவைப்பட்டது. பூடகமாக அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு தொடரில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இதுவரை நான் செய்திராத ஒரு விஷயமாக இருந்தது, என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.