சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் கூட்டு ஆலோசனை கூட்டம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : திரைப்படத்துறையினரின் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். சினிமா படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய இணையதளம் அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய இணையதளம் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கு வகை செய்வதோடு, தொழில் புரிவதை எளிமையாக்குவதை உறுதி செய்யும். அனிமேஷன் தொழில்நுட்பம் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயில உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவரிடம் திரைப்பட சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.