ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் எவரு மீலோ கோடீஸ்வரரு நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சிறப்பு பங்கேற்பாளராக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள்.
இதுவரை ராம் சரண், இயக்குநர் ராஜமவுலி, கொரடலா சிவா, மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள். தற்போது சமந்தாவும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து 25 லட்சத்தை பரிசாக வென்று இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக பயணம் பற்றி பேசி இருக்கிறாராம். தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ நாகசைதன்யா பிரிவு பற்றியோ பேசவில்லையாம். இக்கட்டான மனநிலையிலும் கூட ஒத்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விக்கு தெளிவான பதிலை கூறிய சமந்தாவின் மனநிலையை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தசரா பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 15ம் தேதி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.