இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில்பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் 'சுல்தான்' படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார் ராஷ்மிகா.
தற்போது தெலுங்கில் 'ஆடவல்லு மீக்கு ஜோகர்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது நடிகை ராதிகா மற்றும் ஊர்வசி செய்யும் சேட்டைகளை ராதிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'நவராத்திரி சுபராத்திரி கலைமகளும்' என்ற பாடலுக்கு ராதிகா மற்றும் ஊர்வசி முகபாவனை செய்து ராஷ்மிகாவை கொஞ்சிக்கொண்டே பாடுகின்றனர். இருவருக்கும் இடையில் நிற்கும் ராஷ்மிகா இருவரின் சேட்டையையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்.