நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பொதுத்தேர்தல் போல பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தலும் அதன் வாக்கு எண்ணிக்கையும். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தலைமையிலான அணியினர் பெரு வெற்றி பெற, எதிரணியாக களத்தில் நின்ற பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவியுள்ளார். இந்தநிலையில், தான் தெலுங்கு நடிகர் சங்கமான 'மா'விலிருந்து விலகுவதாக பிரகாஷ்ராஜ் பிரஸ்மீட்டில் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எதிரணியினர் நான் கன்னடன், தெலுங்கை சேர்ந்தவன் அல்ல என்கிற பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். அந்த காரணத்தால் இந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எதிரணியினர் என்னை உள்ளூர் அல்லாதவர் என்று முத்திரை குத்தினர். சகோதரத்துவத்தில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை கேட்பது வேதனையாக உள்ளது. அதனால் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இனியும் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தம் இல்லை. அதனால் சங்கத்தில் இருந்து விலகுகிறேன். அதேசமயம் தெலுங்கு படங்களில் வழக்கம்போல நடிப்பேன்” என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.