மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒருபுறம் சைலன்ட்டாக ஹிட் அடித்து வருகிறது. ஆனால், அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திர நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அந்த தொடரின் சாரதா கதாபாத்திரத்தில் ஜோதி ராயும், நாயகன் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமனும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தொடரின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வீணா வெங்கடேஷ் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல நடிகை சுஜாதா பஞ்சு மீனாட்சியாக நடித்து வருகிறார். இப்படி இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால் சீரியல் முடிவை நோக்கி செல்கிறதா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.