பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் நடிகை கே.ஆர்.விஜயா. அதிலும் அம்மன் வேடத்தில் அவருக்கு நிகரான நடிகை வேறு யாருமில்லை என சொல்லும் அளவிற்கு வெள்ளித்திரையில் பல படங்களில் அம்மனாக நடித்து ரசிகர்களை பக்தி பரவசத்தில் மூழ்க செய்வார். சமீப காலங்களில் திரையுலகையும், நடிப்பையும் விட்டு ஒதுங்கியிருந்த கே.ஆர்.விஜயா தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார். அன்பே வா என்ற தொடரில், உயிருக்கு போராடி வரும் கதாநாயகனை காப்பாற்ற வரும் அம்மனாக கே.ஆர்.விஜயா நடிக்கிறார். அம்மன் செண்டிமென்ட் சீரியலிலும், சினிமாவிலும் எப்போதும் சக்ஸல் பார்முலாவாக இருந்து வருவதால் கே.ஆர்.விஜயாவின் என்ட்ரி அன்பே வா சீரியலின் டிஆர்பியை எகிறச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.