கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகாவின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திருமணத்தில் வைஷாலியின் கழுத்தில் தாலி ஏறும் சமயத்தில் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சி நடிகையான வைஷாலி தனிகா, சத்யதேவ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் அண்மையில் தாங்கள் காதலித்து வருவதை ரசிகர்களுக்கு தெரிவித்து விரைவில் திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லி இருந்தனர். இருவரின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து அவரது திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தின் போது சத்யதேவ் வைஷாலியின் கழுத்தில் தாலியை கட்ட, அப்போது உணர்ச்சிபெருக்கில் வைஷாலி தனிகா கண் கலங்கி ஆனந்த கண்ணீர் சிந்தினார். இதன் வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் வைஷாலிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.