துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரை நடிகையான சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக தொடங்கி நடிகையாக சின்னத்திரையில் பயணித்து கோடான கோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர். பழகுவதற்கு மிக இனிமையான குணம் கொண்ட அவர் சென்ற வருடம் எதிர்பாரத விதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.