பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
நமீதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் லைல்வில் பிக்பாஸ் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் நமீதா மாரிமுத்து யாரும் எதிர்பாரத வகையில் வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். நமீதா மாரிமுத்து வெளியேற அவருக்கும் தாமரைச் செல்விக்கும் ஏற்பட்ட வாக்குவாதமும் அதனை தொடர்ந்து நடந்த சில வேண்டாத சம்பவங்களும் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்நல பிரச்னையால் அவர் வெளியேறியதாக மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், யார் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இருப்பார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்டு ரவுண்டில் போவீர்களா என்று கேட்டதற்கு, "போகலாம் போகாமலும் இருக்கலாம், பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.