இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "புது புது அர்த்தங்கள்" தொடர் 200 எபிசோடை தொட்டு உள்ளது. அபிஷேக் - தேவயாணி முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் பெண்களின் மீதுள்ள இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்ற முயற்சிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற நெடுந்தொடர்களிலிருந்து தனித்து வித்தியாசமாக இருக்கும் இந்த தொடரானது, ஒரு மாமியார் - மருமகள் இடையிலான அன்பான உறவினை மையமாக கொண்டுள்ளது. தனது குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சுற்றியே தனது வாழ்வினை அமைத்துக்கொண்டு, வீட்டிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நற்குணமுள்ள பெண்ணாக லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடித்துள்ளார். இதுவரை இத்தொடரில், வழக்கத்தை மாற்றியமைக்கும் பல்வேறு கதைத் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில் ஒளிபரப்பான இத்தொடரின் அத்தியாயங்களில் அபிஷேக்காக நடித்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கதாபாத்திரங்களின் திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில் நிகழ்ந்தது. திருமணம் முடிந்த பின்பு தொடர்ச்சியாக பல்வேறு மகிழ்ச்சியற்ற தருணங்களை கடக்க நேர்கிறது. அதனைத் தொடர்ந்து லக்ஷ்மி தனது சொந்தக் காலில் நிற்கவும், வேறு எவருடைய ஆதரவும் இல்லாமல் தனக்கான மரியாதையைத் தானே ஈட்டுவதற்கும் முடிவெடுக்கிறாள். தொடரின் 200-வது அத்தியாயத்திலிருந்து, தனக்கு பிடித்த சமையல் துறையில் சாதிக்க வேண்டுமெனக் கடினமாக உழைக்கும் ஒரு மன உறுதிமிக்க லக்ஷ்மியை ரசிகர்கள் காணலாம். வெறும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோக்கிய தேடலாக இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை; பெண்கள் உழைத்து தங்களது கனவுகளை சாதித்து, சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பறைசாற்றவுள்ளது.