இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வந்துள்ள நிலையில் கதையை மாற்றி நடிப்பை தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா, அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரைக்கு இடைவெளி விட்ட ஆல்யா தற்போது ராஜா ராணி சீசன் 2 வில் ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ள செய்தி சமீபத்தில் வெளியானது. அதேசமயம் ராஜா ராணி 2வில் அவரது கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் சீரியலை மேற்கொண்டு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 'சந்தியா கதாபாத்திரம் இப்போது தான் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரகி வருகிறது. எனவே, இன்னும் சில நாட்கள் சந்தியா போலீஸ் ஆவது போல் காட்டாமல் அவர் கர்ப்பமாக இருப்பது போல் காட்டினால் சீரியலில் தொடர்ந்து நடிக்கலாம்' என்று ஆல்யா சீரியல் குழுவிற்கு ஐடியா கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து ஹிந்தியில் வரும் மூலக்கதை போல் அல்லாமல் கதையில் டுவிஸ்ட் அடித்து சந்தியா கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் காட்ட போவதாக சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கதையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.