வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாகும் கனவோடு இருந்திருக்கிறார். அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூடன் திருமணம் நிச்சயம் நடந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அது திருமணத்தில் முடியவில்லை. ஆர்.கே.சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் திவ்யா, தற்போது விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். வக்கீலாக நினைத்தவர் இன்று பலருக்கும் பிடித்த பாக்கியலெட்சுமி ஜெனியாக வலம் வருகிறார்.