சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீ நிதி, ப்ரியா ராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தொடர் செந்தூரப்பூவே. 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ப்ரியா ராமன் வருகைக்கு பிறகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் ஒளிபரப்புவதற்கான டைம் ஸ்லாட் கிடைக்காமல் சில சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன, சில சீரியல்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. தற்போது பிக்பாஸ் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் செந்தூரப்பூவே தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை அந்த சீரியலின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிக விரைவில் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.