23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து நடிகரும், இயக்குனருமான குருப்ரசாத்தின் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சில்வர் ஸ்கிரீனில் எண்ட்ரி கொடுத்துவிட்டதால் மீண்டும் தொலைக்காட்சிக்கு வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் அவர் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரச்சிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் அம்மன் ரோலில் கேமியோவாக நடித்துள்ளார். செம்பருத்தி தொடரில் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல் கதாநாயகிகளை அம்மன் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரச்சிதாவும் ஒரு அம்மனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவர் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தான் அம்மனாக நடிக்கிறார் எனவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் அம்மனாக நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியுள்ள நிலையில் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.