தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல மாடல் மற்றும் விளம்பர நடிகையான திவ்யப்ரியா சிவம், முன்னதாக பாலிமர் தொடரில் ஒளிபரப்பான 'ராஜமன்னார் வகையறா' என்ற தொடரில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் ஜீ தமிழின் 'கோகுலத்தில் சீதை' தொடரில் ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நாட்களிலேயே நடிகையாக கனவோடு இருந்த திவ்யப்ரியா சிவம், தனது முதல் போட்டியிலேயே 'மிஸ் ஐகானிக் கோயம்புத்தூர்' பட்டத்தை வென்றார். தொடர்ந்து 'மிஸ் தமிழ்நாடு' 'மிஸ் செளத் இந்தியா' உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியின் தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
திவ்யப்ரியா சிவம் நடித்து வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.