பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
பிரபல மாடல் மற்றும் விளம்பர நடிகையான திவ்யப்ரியா சிவம், முன்னதாக பாலிமர் தொடரில் ஒளிபரப்பான 'ராஜமன்னார் வகையறா' என்ற தொடரில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் ஜீ தமிழின் 'கோகுலத்தில் சீதை' தொடரில் ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நாட்களிலேயே நடிகையாக கனவோடு இருந்த திவ்யப்ரியா சிவம், தனது முதல் போட்டியிலேயே 'மிஸ் ஐகானிக் கோயம்புத்தூர்' பட்டத்தை வென்றார். தொடர்ந்து 'மிஸ் தமிழ்நாடு' 'மிஸ் செளத் இந்தியா' உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியின் தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
திவ்யப்ரியா சிவம் நடித்து வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.