திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சின்னத்திரை நடிகையான பவித்ரா ஜனனி, விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். போட்டோஷூட்டிலும் களமிறங்கி கலக்கி வரும் அவர், தனது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ள பவித்ரா அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, என்னுடைய முதல் அனுபவம் என பகிர்ந்துள்ளார். மணாலியில் மகிழ்ச்சியாக இருக்கும் பவித்ராவின் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் 'நீங்க இப்படியே ஹேப்பியா இருக்கனும்' என வாழ்த்தி வருகின்றனர்.
பவித்ரா ஜனனிக்கு சினிமா வாய்ப்பும் கதவை தட்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக பவித்ரா அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.