துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, பவர்பாண்டி படத்தின் மூலம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும், அவரது கதாபாத்திரம் பவர்பாண்டி படத்தில் நல்ல நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது முழுநேர நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தனது முதல் பட அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், 'நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்திற்கு நடிப்பதற்கு அழைத்த போது, பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும். மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும். அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தைகளால் தான், நான் திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன்.' என்று கூறியுள்ளார். திவ்யதர்ஷினி தற்போது துருவ நட்சத்திரம், ஜோஸ்வா போன்ற திரைப்படங்க்ளில் நடித்து வருகிறார்.