அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. பெங்களூரை சேர்ந்த ரக்ஷா, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கதாநாயகியாக தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த தொடர் புதிய மாற்றங்களுடன் ஒளிபரப்ப தொடங்கிய போது, ரக்ஷா ஹோலா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து அவர் ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே சிவம் தொடரும் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ரக்ஷா ஹோலா அதிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற தகவலை தொலைக்காட்சி நிறுவனம் மிக விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.