இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்து மற்றும் ஆல்யா மானசா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை முன்னிட்டு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசவ காலம் நெருங்கிவிட்ட நிலையில், குறைந்தது ஒருமாத காலமாவது ஆல்யா ஓய்வுக்கு சென்றுவிடுவார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா? எனஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'சீரியலை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். இதனால், ராஜா ராணி-2ல் அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என தெரிய வருகிறது. ஆல்யா தற்போது 7 மாதம் கர்ப்பத்துடன் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரீனா கரப்பமாக இருந்த காலத்தில் அவர் ஜெயிலுக்கு சென்றதாக காட்டி பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், ராஜா ராணி-2வை பொறுத்தவரை ஆல்யா தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவர் சீரியலை விட்டு விலகும் பட்சத்தில் சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.