விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் புலி ராகவேந்திரன் இந்த தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்கப்படும் என்பதையும் புலி ராகவேந்திரன் உருக்கத்துடன் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு வேறு வேலை பார்க்கப்போவதாகவும் மாறன் கூறியிருந்தார்.
மாறன் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில் சகநடிகை மற்றும் தோழியுமான ப்ரியங்கா குமாருக்கு மாறன், தொடரை விட்டு நீங்கும் முன் அழகான கரடி பொம்மை ஒன்றை புலி ராகவேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.