முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர்.
இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஷில்பா நடிக்கிறார். அவர் நடித்த காட்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரிக்கான ஓப்பனிங் சீனிலேயே, அவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்று விடுகிறார். படையப்பா நீலாம்பரி போல கெத்தாக நுழையும் இந்த கதாபாத்திரம் சீரியலிலுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.