முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ராஜா ராணி 2. சந்தியாவின் கனவை நனவாக்க அவரது அண்ணன் சரவணனை உதவ சொல்லி சந்தியாவின் தந்தை கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட் ட்ராக் புதிதாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சால்சா மணி சீரியலை விட்டு திடீரென விலகியுள்ளார்.
சால்சா மணி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அதேசமயம் சால்சா மணி நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சித்தார்த் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். இவரும் நல்ல நடிகர் தான். தெய்வமகள் தொடரில் சுரேஷ் என்ற கதாபாத்திரத்திலும், மிஷ்கின் படங்களில் குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் சூப்பரான கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். சித்தார்த் வெங்கடேஷ் சரவணன் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது இனி அந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.