லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பழைய சிந்தனைகளை தகர்த்து புதுமையான நிகழ்ச்சிகளான சர்வைவர், ராக்ஸ்டார், சூப்பர் குயின் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அடுத்து சேர்கிறது - 'ரன் பேபி ரன்' என்ற நிகழ்ச்சி. முற்றிலும் மாறுபட்ட ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.
உடல் மற்றும் மன வலிமை இரண்டும் சேர்ந்த இந்த போட்டாப் போட்டி நிகழ்ச்சியில், இரண்டு அணிகள் களமிறங்கி, சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொள்வார்கள். வரும் பிப்ரவரி 27 முதல் மதியம் 1:00 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகவுள்ளது. நகைச்சுவைக்கும், டைமிங் காமெடிக்கும் பெயர் பெற்ற துடுக்கான நடிகர் ஜகன், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் துறையை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதுவரைக் கண்டிராத கடுமையான போட்டிகளை அவர்கள் சந்திப்பார்கள். ஈமோஜிகளை வைத்து பதில்களை கண்டுபிடித்து மறைந்துள்ள ஒரு பிரபலத்தை அறியும் பந்தையம் துவங்கி, பல்வேறு புதுமையான விளையாட்டுகளை இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் காணலாம்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்கள் பல பரிசுகளை வெல்லலாம். இருப்பினும்,'டோன்ட் மூவ் சேலஞ்ச்' ஒவ்வொரு சுற்றையும் வெல்லும் அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த பகுதியின் போது, போட்டியாளர்கள் ஒரு அசைவாலோ அல்லது வெறும் கண் சிமிட்டல் காரணமாகவோ அதுவரை வெற்றி பெற்ற அனைத்தையும் இழக்க நேரலாம். பரபரப்பான ஒவ்வொரு சுற்றிலும் ஆறு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பரிசுத் தொகையை தட்டிச் செல்ல மோதுவார்கள்.
ரன் பேபி ரன் வரும் பிப்ரவரி 27 முதல், ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1:00மணிக்குஒளிபரப்பாகவுள்ளது